பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் வளாகங்களில் 3 மாதத்துக்கு ஒருமுறை பாதுகாப்பு தணிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்கு தொழில்​நுட்​பக்​கல்வி ஆணை​யர் ஜெ.இன்​னசென்ட் அனுப்​பி​ய சுற்​றறிக்கை:

கல்​லூரி​கள், பல்கலைக்​கழகங்​களில் மாணவர்​களின் பாது​காப்​புக்கு பின்​பற்ற வேண்​டிய வழி​காட்டு நெறி​முறை​களைபின்​பற்றி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் பாலிடெக்​னிக் கல்​லூரி​களின் வளாகங்​களில் மாணவர் பாதுகாப்பை மேம்​படுத்த வேண்டும்.

வளாகங்​களில் கண்காணிப்பு கேம​ராக்​கள் பொருத்துதல், பயிற்சி பெற்ற பாது​காப்புபணி​யாளர்​களை அமர்த்துதல் போன்ற அரசு உத்​தரவை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். உள்​ளூர் காவல்​துறை​யினரின் ஒருங்​கிணைப்​புடன் வளாகபாது​காப்பு தணிக்கை 3 மாதங்​களுக்கு ஒரு​முறை நடத்​தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்​கள் கல்வி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தில் தவறாமல் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in