பொறியியல் கல்வி: மே 2-வது வாரத்தில் விண்ணப்பப் பதிவு

பொறியியல் கலந்தாய்வு | கோப்புப் படம்
பொறியியல் கலந்தாய்வு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்​வுக்​குரிய விண்​ணப்பப் பதிவு மே 2-வது வாரத்​தில் தொடங்​குகிறது.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 400-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்கு 1.7 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இவை ஆண்​டு​தோறும் பொது கலந்​தாய்வு மூலம் ஒற்​றைச்​சாளர முறை​யில் நிரப்​பப்​படு​கின்​றன.

நடப்​பாண்டு பொறி​யியல் கலந்​தாய்வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் மூலம் ஜூலை மாதம் இணைய வழி​யில் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான விண்​ணப்​பப் பதிவு மே 2-வது வாரத்​தில் தொடங்​க​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஜூலையில் கலந்தாய்வு: இதுகுறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும். விண்ணப்பம் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, ஜூலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூனில் வெளியிடப்படும்.

இது​சார்ந்த கூடு​தல் விவரங்​களை https://www.tneaonline.org/ எனும் வலைத்​தளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம். மேலும், ஏஐ போன்ற தொழில்​நுட்​பங்​கள் வளர்ச்சி காரண​மாக பொறி​யியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்​டு​களாக அதி​கரித்​து​ வரு​கிறது. இந்​தாண்​டும் சேர்க்கை அதி​கரிக்​கும் என நம்​பு​கிறோம். இவ்​வாறு அதி​கரி​கள் கூறினர்​.

பொறியியல் கலந்தாய்வு | கோப்புப் படம்
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in