பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி

பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி
Updated on
1 min read

சென்னை: பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பு வெளி​யி​டா​மல் டிஆர்பி கால​தாமதம் செய்து வரு​வதாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​கள், பி.எட் பட்​ட​தா​ரி​கள் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் தகு​தித்​தேர்வு (‘டெட்’) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 தடவை கட்​டா​யம் ‘டெட்’ தேர்வு நடத்​தப்பட வேண்​டும். இந்த விதி​முறை​யின்​படி, மத்​திய அரசு பள்​ளி​களுக்​கான ‘சி-டெட்’ தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை திட்​ட​மிட்​டபடி நடத்​தப்​படு​கிறது.

ஆனால், தமிழகத்​தில் ‘டெட்’ தேர்வு நடத்​தும் ஆசிரியர் தேர்வு வாரியமோ (டிஆர்​பி) இந்த விதி​முறையை இது​வரை எந்த ஆண்​டிலும் அமல்​படுத்​தல்​லை. ஆண்​டுக்கு ஒரு ‘டெட்’ தேர்வு நடத்​தப்​பட்​டாலே பெரிய விஷய​மாகப் பார்க்​கப்​படு​கிறது. கடைசி​யாக ‘டெட்’ தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பரில் நடத்​தப்​பட்​டது.

ஆசிரியர் தேர்வு வாரி​யம் வெளி​யிட்ட 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி, இந்த ஆண்​டுக்​கான முதலா​வது பொது ‘டெட்’ தேர்​வுக்கு கடந்த மே மாதம் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு ஜூலை மாதத்​தில் தேர்வு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். 2-வது தேர்​வுக்​கான அறி​விப்பு அக்​டோபர் மாதம் வெளி​யிடப்​பட்டு டிசம்​பரில் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். ஆனால், முதலா​வது தேர்​வுக்​கான அறி​விப்​பு​கூட இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை.

இதற்​கிடையே, பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட் தேர்வு ஜூலை 4,5-ம் தேதி​களில் தேர்வு நடத்​தப்​பட்​டது. இந்​தத் தேர்​வுக்கு பணி​யில் இல்​லாத ஆசிரியர்​கள் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. தற்​போது பள்​ளி​களில் பணிபுரி​யாத இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள், இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்​றும் பி.எட் முடித்​தவர்​கள் பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பை எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்​றும் பி.எட் முடித்​தவர்​கள் கூறும்​போது, “என்​சிடிஇ விதி​முறை​யின்​படி, ‘சி-டெட்’ தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை திட்​ட​மிட்​டபடி நடத்​தப்​படு​கிறது. ஆனால், டிஆர்பி மட்​டும் ஆண்​டுக்கு ஒரு டெட் தேர்​வை​கூட நடத்த கால​தாமதம் செய்​வது ஏன் என்று தெரிய​வில்​லை. எனவே, இனி​யும் கால​தாமதம் செய்​யாமல் பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பை உடனே வெளி​யிட வேண்​டும். அதே​போல் தேர்வு முடிவை​யும் விரைந்​து வெளி​யிட வேண்​டும்​” என்​றனர்​.

பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி
முதல்வர் விஜய் இன்று கரூர் வருகை: 10 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in