

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு அரசுப் பள்ளிகள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவையாக திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டை கொண்டாடுவதன் வாயிலாக மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்படும்.
அதன்படி நடப்புக் கல்வியாண்டில் (2025-26) 370 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவுசெய்துள்ளன. இந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவை கொண்டாட வேண்டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.