விஐடி-யில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம்: ரூ.15 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

விஐடி பல்கலைக்கழகத்தில், பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்றார். உடன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் துணைத் தலைவர் சுதாகர் குடிபதி உள்ளிட்டோர்.

விஐடி பல்கலைக்கழகத்தில், பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்றார். உடன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் துணைத் தலைவர் சுதாகர் குடிபதி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூர்: ​விஐடி பல்​கலைக்​கழகம் மற்​றும் புனே பஜாஜ் ஆட்டோ ஃபவுண்​டேஷன் இடையே பொறி​யியல், டிப்​ளமோ பட்​ட​தா​ரி​கள் மற்​றும் இறு​தி​யாண்டு மாணவர்​களுக்கு வேலை​வாய்ப்பு திறன்​கள் குறித்த பயிற்சி அளிப்​ப​தற்​காக அண்​மை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. இதன்மூலம் பஜாஜ் பொறி​யியல் திறன் பயிற்சி மையமான ‘பெஸ்ட்’அமையவுள்ளது.

ரூ.15 கோடி முதலீட்​டில் உரு​வாக்​கப்​படு​ம் இந்த மையம் எலெக்ட்​ரானிக்ஸ் உற்​பத்தி அமைப்​பு​கள் மற்​றும் இ-மொபிலிட்டி ஆகிய துறை​களில் மேம்​பட்ட பயிற்சி அளிப்​ப​தற்​கான அதிநவீன வசதி​களை கொண்​டிருக்​கும். விஐடி மெக்​கானிக்​கல் இன்​ஜினியரிங், விஎல்​எஸ்ஐ டிசைன் அண்ட் டெக்​னாலஜி, எலெக்ட்​ரிக்​கல் இன்​ஜினியரிங் உள்​ளிட்ட முக்​கிய பொறி​யியல் மாணவர்​கள் இந்த மையம் மூலம் பலன் பெறு​வர்.

இதுகுறித்​து, விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறும்​போது, “செய்​முறை வழியி​லான கற்​றலுக்கு விஐடி முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. ரூ.15 கோடிமுதலீட்​டிலான ‘பெஸ்ட்’ மையம், மாணவர்​களுக்கு அதிநவீன மற்​றும் ஆழமான பயிற்சி சூழலை வழங்​கி, விஐடி மாணவர்​களின் திறனை மேம்​படுத்தி அவர்​களை தொழில்​துறை​யில் மிக​வும் போட்​டித்​தன்மை வாய்ந்​தவர்​களாக மாற்​றும்” என்​றார்.

பஜாஜ் ஆட்டோ ஃபவுண்​டேஷனின் சிஎஸ்​ஆர் துணைத்​தலை​வர் சுதாகர் குடிபதி கூறும்​போது, “உற்​பத்தி மற்​றும் ஆட்​டோமொபைல் துறை​கள் வேக​மாக வளர்ந்து வரு​வ​தால், அதிக திறன் கொண்ட பணி​யாளர்​களுக்​கான தேவை பெரு​மள​வில் உரு​வாகி​யுள்​ளது. இந்​தத் திறன் இடைவெளியை குறைக்​க​ இந்​தியா முழு​வதும் பல ‘பெஸ்ட்’ மையங்​களை நிறுவ பஜாஜ் திட்​ட​மிட்​டுள்​ளது” என்​றார்.

சமூக மற்​றும் பொருளா​தார ரீதி​யாக பின்​தங்​கிய மாணவர்​களுக்​கும் தரமான திறன் மேம்​பாட்டு பயிற்சி கிடைப்​பதை உறுதி செய்​யும் வகை​யில், அவர்களுக்​கான உதவித்​தொகை திட்​டங்​கள் குறித்து பஜாஜ் ஆட்டோ ஃபவுண்​டேஷனின் சிஎஸ்​ஆர் தலை​வர் ரமேஷ் விரி​வாக விளக்​கி​னார். இதில்​,​ விஐடி துணைத்​தலை​வர்​கள் சங்​கர் விசுவ​நாதன், சேகர்விசுவ​நாதன், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டாரெட்​டி, உதவி துணைத்​தலை​வர் காதம்​பரி எஸ்​.​விசுவ​நாதன், துணைவேந்​தர் வி.எஸ்​.​காஞ்​சனா பாஸ்​கரன்,இணை துணைவேந்​தர் பார்த்​த​ சா​ரதி மல்​லிக், பதி​வாளர் டி.ஜெய​பாரதி ஆகியோர் கலந்து கொண்​டனர். முன்​ன​தாக இயந்​திர​வியல் பொறி​யியல் பள்​ளி​யின் முதன்​மையர் பி.குப்​பன் வரவேற்​றார். வி-ஸ்​பேஸ் இயக்​குநர் எஸ்​.சி​வானந்​தம் நன்றி கூறி​னார்​.

<div class="paragraphs"><p>விஐடி பல்கலைக்கழகத்தில், பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் வேந்தர் கோ.விசுவநாதன் பங்கேற்றார். உடன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஃபவுண்டேஷனின் சிஎஸ்ஆர் துணைத் தலைவர் சுதாகர் குடிபதி உள்ளிட்டோர்.</p></div>
கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனியில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in