பொறியியல் கலந்தாய்வில் ஜூன் 5 முதல் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

பொறியியல் கலந்தாய்வில் ஜூன் 5 முதல் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம்நிரப்பப்படுகின்றன. இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.

ஒரு லட்சத்து 1,342 பேர்: இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்து 89,881 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 1,342 பேர் கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

இந்நிலையில் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீடு பிரிவில்விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக பங்கேற்கும் மாணவர்களின் பட்டியல்www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in