பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வு, ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் நாளை (மே 11) முதல் மே 17-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 18, 19, 20-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in