பாரதியார் பல்கலைக்கழகத்துடன் விமானப் படை புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாரதியார் பல்கலைக்கழகத்துடன் விமானப் படை புரிந்துணர்வு ஒப்பந்தம்
Updated on
1 min read

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய விமானப்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பல்கலை.யின் இரு பாடப்பிரிவுகளில் பகுதி நேர எம்.ஃபில் மற்றும் பிஎச்டி படிப்பதற்கான அனுமதியை விமானப்படையினர் பெறுவதற்கு உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை. பதிவாளர் முருகவேல் மற்றும் இந்திய விமானப்படை ஏர் வைஸ்மார்ஷல் ராஜீவ் சர்மா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். துணைவேந்தர் கமிட்டி உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர், டிஆர்டிஓ இயக்குநர் கதிர்வேலு உட்பட பேராசிரியர்கள், விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in