Published : 16 Mar 2023 04:33 AM
Last Updated : 16 Mar 2023 04:33 AM

பிளஸ் 2 ஆங்கில பாடத்தேர்வு - 49,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை

சென்னை: பிளஸ் 2 ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 13-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆங்கிலப் பாடத்தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் 3,185 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.

மாணவர்கள் இடைநிற்றல்: இதற்கிடையே, முதல் நாளில் நடந்தமொழிப்பாடத் தேர்வில் 50,674 மாணவர்கள் பங்கேற்வில்லை. அதேபோல, நேற்று நடந்த ஆங்கில பாடத் தேர்விலும் 49 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவீத அளவிலேயே இருந்தது.

கரோனா தொற்றுக்கு பிறகு, அந்த விகிதம் உயர்ந்து தற்போது 6 சதவீதத்தை எட்டியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் இடைநிற்றலே முக்கிய காரணம் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மறுபுறம் இந்த விவகாரம் சர்ச்சையானதால் முறையான புள்ளிவிவரங்களை வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 1 ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 16) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x