Published : 20 Jan 2023 04:10 AM
Last Updated : 20 Jan 2023 04:10 AM

நாசா காலண்டரில் இடம்பெற்ற பழநி மாணவியின் ஓவியம்

பழநி: நாசா காலண்டரில் பழநி அருகேயுள்ள  வித்யா மந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி அ.தித்திகாவின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக சர்வதேச அளவில் ஓவியப்போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் காலண்டரில் இடம் பெறும். 2023-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியாவில் இருந்து 9 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற பழநி அருகேயுள்ள ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி தித்திகாவின் ஓவியம் மார்ச் மாத காலண்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அம்மாணவியை பள்ளி தாளாளர் வீரா எஸ்.டி. சாமிநாதன், இயக்குநர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x