மத்திய பல்கலை.களில் சேருவதற்கான ‘க்யூட்’ தேர்வு மே 21-ல் தொடக்கம்

மத்திய பல்கலை.களில் சேருவதற்கான ‘க்யூட்’ தேர்வு மே 21-ல் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு மே 21-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு (‘க்யூட்’) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த கல்வியாண்டில் (2023-24) ‘க்யூட்’ தேர்வு அறிவிப்பை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ தேர்வு அடுத்தாண்டு மே 21 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். இதேபோல், முதுநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.

இதற்கான தேர்வுக்கால அட்டவணையை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அடுத்த வாரம் வெளியிடும். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in