Published : 07 Dec 2022 06:24 AM
Last Updated : 07 Dec 2022 06:24 AM

‘எமிஸ்’ தகவலின்படி மாணவர் நலத்திட்ட உதவி: கல்வித் துறை

சென்னை: பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) தளத்தில் இருந்து தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே 2023-24 கல்வியாண்டில் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட உள்ளது.

அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் சரிபார்த்து அதில் வேறுபாடுஇ ருப்பின் அந்த விவரங்களை எமிஸ் தளத்தில்டிச.16-க்குள் பதிவேற்ற வேண்டும்.

மேலும், இனி வருங்காலங்களில் எமிஸ் தளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையை மட்டுமே அனைத்து நலத்திட்டங்களுக்கும் தேவைப் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x