மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி., எம்பிசி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் | கோப்புப் படம்
கோவை ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்பிசி) மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, கல்வி உதவித்தொகைக்கு 2022-2023 -ம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களையோ அணுகலாம். மேலும், http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschems என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ‘ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்:044-28551462’ என்ற முகவரிக்கு வரும் 2023 ஜனவரி 30-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in