Published : 20 Nov 2022 04:40 AM
Last Updated : 20 Nov 2022 04:40 AM

பொறியியல் படிப்புகளில் காலியிடங்களை நிரப்ப துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: பொறியியல் படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 2 நாள் துணை கலந்தாய்வு இன்று (நவ.20) தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 54,278 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20 முதல் நவ.10-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து, காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த நவ.9-ல் தொடங்கி 13-ம் தேதி நிறைவு பெற்றது. இதற்கு 10,012 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அரசு உதவி மையங்கள் மூலம் நடத்தப்பட்டன. இதில் தகுதியான 9,731 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் (நவ.20, 21) நடைபெற உள்ளது. மாணவர்கள், தங்களுக்கு பிடித்த கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு விவரங்களை நாளை மாலை 5 மணிக்குள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் நாளை இரவு 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் 22-ம்தேதி மாலை 7 மணிக்குள் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதன்பின் இறுதி ஒதுக்கீட்டு ஆணை 23-ம் தேதி வழங்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து எஸ்சிஏ பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நவ.24, 25-ம் தேதிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x