Published : 19 Nov 2022 07:39 AM
Last Updated : 19 Nov 2022 07:39 AM

இன்று குரூப் - 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழகத்தில் குரூப்-1 பதவியில்காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்தஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில்குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று (நவ.19) நடக்கிறது. காலை9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. தேர்வு தள்ளிவைப்பு: இதற்கிடையே குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் முதுநிலைபட்டப் படிப்புகளுக்கு இன்று (நவ. 19) நடைபெற இருந்த பருவத்தேர்வுகளை சென்னை பல்கலை. தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x