Published : 16 Oct 2022 04:25 AM
Last Updated : 16 Oct 2022 04:25 AM

மருத்துவப் படிப்புக்கு மாநில தரவரிசை அக் 20-க்கு பின்னர் வெளியிடப்படும்

கிருஷ்ணகிரி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு இடஒதுக்கீட்டின்படி மருத்துவச் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து தமிழகத்தின் மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புக்கு கவுன்சலிங் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x