Published : 18 Sep 2022 07:25 AM
Last Updated : 18 Sep 2022 07:25 AM

ஆசிரியர் தேர்வு: சான்றிதழ் சமர்ப்பிக்க இறுதி வாய்ப்பு

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான கணினி வழித் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.

இதன் முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது.

அதனடிப்படையில் 11 பாடப்பிரிவுகளில் ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கணிசமான தேர்வர்கள் சில சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்காததால் அவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செப்.19, 20-ல் சான்றிதழை நேரில் சமர்ப்பிக்கலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x