Published : 19 Aug 2022 03:44 AM
Last Updated : 19 Aug 2022 03:44 AM

3 ஆண்டு சட்டப் படிப்பு: விண்ணப்பிக்க செப்.19 வரை அவகாசம்

சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 3 ஆண்டு எல்எல்பிபடிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவுக்கு ஆகஸ்ட் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று காலஅவகாசம் செப்.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் துரிதமாக விண்ணப்பிக்குமாறு பல்கலை. பதிவாளர் (பொறுப்பு) கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x