Published : 15 Aug 2022 07:19 AM
Last Updated : 15 Aug 2022 07:19 AM

இக்னோ படிப்புகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022-ம் ஆண்டு பருவத்திற்கான இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில், மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

http://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், குறிப்பிட்ட சில இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x