Published : 05 Aug 2022 06:28 AM
Last Updated : 05 Aug 2022 06:28 AM

சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்குகிறது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை நடப்புகல்வியாண்டில் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tndalu.ac.in/ என்றஇணையதளம் வழியாக ஆக.30 வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x