‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல் - இணைய வழியில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல் - இணைய வழியில் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும்போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார்.

கலாம் மறைவுக்கு பிறகு,அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில், ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்திவருகிறது. அந்த வகையில், நாளை (ஜூலை 27, புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது.

இதில், ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, மூத்த விஞ்ஞானியும் இஸ்ரோ முன்னாள் இயக்குநருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர்.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு கலாம் ஆற்றியுள்ள சிறப்பான பங்களிப்பு குறித்தும், கலாமின் சிறந்த பண்புகள் பற்றியும் இந்த கலந்துரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.

ஆர்வம் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in