Published : 10 Jul 2022 05:01 AM
Last Updated : 10 Jul 2022 05:01 AM

‘இந்து தமிழ் திசை’, டாப்பர்ஸ் கிளாஸ் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான காஃபி ஓவியப் பயிற்சி - ஜூலை 15-ல் நடக்கிறது

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘காஃபி ஓவியப் பயிற்சி’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளிக் குழந்தைகளின் பல்வேறு திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘காஃபி ஓவியப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை 3 நாட்கள் நடத்துகிறது. ஜூலை 15, 16, 17-ம் தேதிகளில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

3-ம் வகுப்புக்கு மேல் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த ஓவியப் பயிற்சியில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00767 என்ற இணையதளத்தில் ரூ.530 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x