அரசு கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதில் சேர www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், மேற்கூறிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு தொடங்கிய 4 நாட்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பப் பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிறகு கலந்தாய்வு நடத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in