Published : 16 Jun 2022 07:45 AM
Last Updated : 16 Jun 2022 07:45 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு

சென்னை

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதியுடன் முடிவடைந்தன.

தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜூன் 17-ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.

அதன் விவரங்களை http://www.dge.tn.gov.in/, http://www.tnresults.nic.in/ உள்ளிட்ட வலைதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் மதிப்பெண், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x