Published : 24 May 2022 01:33 PM
Last Updated : 24 May 2022 01:33 PM

ப்ரீமியம்
கோடைக்கால பயிற்சி முகாம்கள்: ஓர் அலசல்

ரா. மனோஜ்

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. கூடவே புற்றீசல் போல கோடைக்கால பயிற்சி முகாம்களும் களைக்கட்டத் தொடங்கிவிட்டன. கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் செயல்படாத நிலையில் தேர்வுகளும் தள்ளிப் போயின. இதனால் கோடைக்கால பயிற்சி முகாம்கள் செயல்படத் தடை இருந்து வந்தது. இப்போது பள்ளிகள் தொடங்கி, தேர்வுகளும் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வண்ணமயமான கைப்பிரதி விளம்பரங்களோடு பயிற்சி முகாம்களும் களத்தில் குதித்து விட்டன.

கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்குப் பரந்த வெளிகள் இருக்கும். மரத்தில் ஏறுவார்கள், வாய்க்காலில் விளையாடுவார்கள். பம்பு செட்டுகளில் குளிப்பார்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு அப்படிப்பட்ட சூழல் கிடைப்பதில்லை. முன்பு காலியாக இருந்த மைதானங்கள் இப்போது கட்டடங்களாகக் காட்சியளிக்கின்றன. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகள் மொபைல் போன், வீடியோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று நாள் முழுக்க ஏதேனும் ஒரு திரைக்கு அடிமையாகிச் சிறு வயதிலேயே கண்கள் பாதிப்பு, கவனச் சிதறல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆட்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் கவனத்தைத் திசை திருப்ப உருவான ஒன்றே கோடைக்கால பயிற்சி முகாம்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x