Published : 19 May 2022 04:58 AM
Last Updated : 19 May 2022 04:58 AM

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கையெழுத்து பயிற்சி: மே.23 முதல் 29 வரை நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் மாணவ -மாணவிகளுக்கான கோடைகால கையெழுத்துப் பயிற்சி, ஆன்லைனில் மே 23 முதல் 7 நாட்கள் நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், பல்வேறு செயல்பாடுகளை நேரடியாகவும், ஆன்லைனிலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கையெழுத்து குறித்த ஆன்லைன் பயிற்சி மே.23 முதல் 29-ம் தேதி வரை தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடைகாலப் பயிற்சியாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் கையெழுத்துப் பயிற்சியில் மாணவ - மாணவிகளின் கையெழுத்துத் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00578 என்ற லிங்க்கில், ரூ.825 கட்டணம் செலுத்தி, பதிவுசெய்து கொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ - ஏபிஜே அகாடமி இணைந்து வழங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x