Published : 14 May 2022 07:52 AM
Last Updated : 14 May 2022 07:52 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (மே 15) நிறைவு பெறுகிறது. http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x