1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (மே 14) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடைசி நாளான இன்று (மே 13) உடற்கல்வி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் (மே 14) ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறையில் விருப்பப்படும் மாணவர்கள், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in