Published : 04 May 2022 11:59 PM
Last Updated : 04 May 2022 11:59 PM

அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு - மத்திய அரசு தகவல் 

புதுடெல்லி: பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலோ மைட் சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2022-2023 கல்வியாண்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கல்வி பயில இருக்கும் பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலோ மைட் சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வீதத்தைத் திருத்தி அமைத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி 1-4 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடை மற்றும் புத்தகச் செலவுக்காக ரூ.1,000-மும், 5 - 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,500-மும், 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2,000-மும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3,000-மும் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

அதேப்போல் ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000-மும் அளிக்கப்படவுள்ளது. பொறியியல், மருத்துவம், எம்பிஏ மாணவர்களுக்கு ரூ.25,000-மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x