Published : 01 May 2022 06:53 AM
Last Updated : 01 May 2022 06:53 AM

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: திருச்சியில் இன்று காலை நடைபெறுகிறது

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை 9 மணிக்கு திருச்சியில் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான கல்வித் தகுதி, எத்தனைஆண்டுகள் படிக்க வேண்டும்... என்பன உள்ளிட்ட பல கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

இத் தயக்கத்தைப் போக்கும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இதில், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வி.பாலகிருஷ்ணன், ஐபிஎஸ்., கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர், ஐஏஎஸ், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.htamil.org/00468 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூலும்,பாடத்திட்டக் குறிப்புகளும் இலவச மாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x