Published : 28 Apr 2022 06:08 AM
Last Updated : 28 Apr 2022 06:08 AM

இலவசக் கட்டாயக் கல்வி மாணவர் சேர்க்கை: 37,000 பேர் விண்ணப்பம்

சென்னை: இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்நிலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்கியது. ஒரு வாரத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 18-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ளது. எனினும், பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x