Published : 27 Mar 2022 04:30 AM
Last Updated : 27 Mar 2022 04:30 AM

இளநிலை சட்டப் படிப்பு கலந்தாய்வு அறிவிப்பு

சென்னை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 3 ஆண்டுகால இளநிலை சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் 24-ம் தேதி வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் 25 மற்றும் 26-ம் தேதிகளில் ஆன்லைனில் சரி பார்க்கப்பட்டு அவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 27, 28-ம் தேதிகளில் நடத்தப்படும். 29-ம் தேதி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்படும்.

ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் மார்ச் 30 முதல் ஏப்.1-க்குள் அந்தந்த கல்லூரியில் சேர வேண்டும். அதேபோல், 3 ஆண்டு இளநிலை ஆனர்ஸ்சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25, 26-ம் தேதிகளில் ஆன்லைனில் நடத்தப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை 27-ம் தேதி வழங்கப்படும். இந்த மாணவர்கள் மார்ச் 28 முதல் 31-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x