அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
Updated on
1 min read

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் 1.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 176 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இணைய வழியில் கடந்த மே 7-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 98,263 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 57,093 மாணவர்கள் மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 27-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in