10-ம் வகுப்பு பொது தேர்வில் 94% மாணவர்கள் தேர்ச்சி: மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை!

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு (எஸ்​எஸ்​எல்​சி) பொதுத் தேர்வு எழு​திய 8.71 லட்​சம் மாணவர்​களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். வழக்​கம்​போல இந்த ஆண்​டும் மாணவி​களே தேர்ச்​சி​யில் முன்​னிலை பெற்​றுள்​ளனர். 1,867 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 4,917 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம் முழு​வதும் 4,113 மையங்​களில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்​ரல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது. தேர்வு எழுத 8.87 லட்​சம் மாணவர்​கள் பதிவு செய்​தனர். 4.36 லட்​சம் மாணவர்​கள், 4.35 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 8.71 லட்​சம் பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். இடைநிற்​றல் உள்​ளிட்ட காரணங்​களால் 15,652 பேர் பங்​கேற்​க​வில்​லை.

88 முகாம்​களில் விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடந்​தது. தேர்வு முடிவு​கள் மே 19-ம் தேதி வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், அனைத்து பணி​களும் முன்​கூட்​டியே முடிந்​த​தால் மே 16-ம் தேதியே முடிவு​களை வெளி​யிட தேர்​வுத் துறை திட்​ட​மிட்​டது.

அதன்​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்வி துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று காலை 9 மணிக்கு வெளி​யிட்​டார். அடுத்த சில நிமிடங்​களில், மாணவர்​களின் செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி (எஸ்​எம்​எஸ்) மூல​மாக​வும், பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சல் மூல​மாக​வும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு​கள் அனுப்​பப்​பட்​டன.

தேர்வு எழு​தி​ய​தில் 4.17 லட்​சம் மாணவி​கள், 4 லட்​சம் மாணவர்​கள் என மொத்​தம் 8.17 லட்​சம் பேர் (93.80%) தேர்ச்சி அடைந்​துள்​ளனர். இது கடந்த ஆண்​டை​விட (91.55%) 2.25 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 95.88 சதவீத​மும், மாணவர்​கள் 91.74 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை ​விட மாணவி​கள் 4.14 சதவீதம் அதி​கம். 2013-ம் ஆண்​டில் இருந்து பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்​தில் தொடர்ந்து மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர். 23,769 தனி தேர்​வர்​களில் 9,616 பேர் (40.46%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றுள்​ளனர். 12,290 மாற்​றுத் திறன் மாணவர்​களில் 11,409 (92.83%) பேரும், 237 கைதி​களில் 230 (97.05%) பேரும் தேர்ச்சி அடைந்​துள்​ளனர்.

7,555 மேல்​நிலைப் பள்​ளி​கள், 4,930 உயர்​நிலைப் பள்​ளி​கள் என மொத்​தம் 12,485 பள்​ளி​களை சேர்ந்த மாணவர்​கள் தேர்வு எழு​தினர். இதில் 1,867 அரசுப் பள்​ளி​கள்உட்பட மொத்​தம் 4,917 பள்​ளி​கள்100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்​துள்​ளன. கடந்த 2024-ம் ஆண்டு இந்த எண்​ணிக்கை 4,105 ஆக இருந்​தது. அரசு பள்​ளி​கள் 91.26%, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் 93.63%, தனி​யார் சுயநிதி பள்​ளி​கள் 97.99% தேர்ச்சி பெற்​றுள்​ளன. இதில், தனி​யார் பள்​ளி​களில் தேர்ச்சி விகிதம் அதி​க​மாக உள்​ளது. அதே​போல, இரு​பாலர் பள்​ளி​கள் 94.06%, பெண்​கள் பள்​ளி​கள் 95.36%, ஆண்​கள் பள்​ளி​கள் 97.84% தேர்ச்சி பெற்​றுள்​ளன. ஆண்​கள் பள்​ளி​களை​விட, பெண்​கள் பள்​ளி​கள் அதிக தேர்ச்​சியை அடைந்​துள்​ளன.

பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை இழந்​தவர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியை தொடர ஏது​வாக, ஜூலை 4-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இத்​தேர்​வுக்கு பள்ளி மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் மூல​மாக​வும், தனி தேர்​வர்​கள் தேர்​வுத் துறை சேவை மையங்​கள் மூல​மாக​வும் மே 22 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை www.dge.tn.gov.in எனும் தளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

சிவகங்கை மாவட்​டம் முதல் இடம்: ஒட்​டுமொத்த தேர்ச்​சி​யில் மாவட்​டங்​கள் அளவில் 98.31 சதவீதத்​துடன் சிவகங்கை முதல் இடம் பெற்​றுள்​ளது. விருதுநகர் (97.45%),தூத்​துக்​குடி (96.76%), கன்​னி​யாகுமரி (96.66%), திருச்சி (96.61%) ஆகிய மாவட்​டங்​கள் அடுத்​தடுத்த நிலை​யில் உள்​ளன. வேலூர் (85.44%) கடைசி இடத்​தில் உள்​ளது.தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி 90.73 சதவீத​மாக உள்​ளது.கடந்த ஆண்டு அரியலூர் மாவட்​டம் முதல் இடம் பிடித்​தது. இந்த ஆண்டு அங்கு தேர்ச்சி விகிதம் குறைந்​து, முதல் 5 இடங்​களில்​கூடஇடம்​பெற​வில்​லை. கல்​வி​யில் பின் ​தங்​கிய மாவட்​டங்​களில் ஒன்​றாக கருதப்​படும் சிவகங்கை மாவட்​டம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் சிவகங்கை (97.49%) மாவட்​டம் முதல் இடம் பிடித்​துள்​ளது, விருதுநகர் (95.57%), கன்​னி​யாகுமரி (95.47%) மாவட்​டங்​கள் 2, 3-ம் இடங்​களை பெற்​றுள்​ளன. இதி​லும்​ வேலூர்​ (82.17%) மாவட்​டம்​ கடைசி இடத்​தில்​ உள்​ளது.

23,444 பேர் நூற்றுக்கு நூறு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெவ்வேறு பாடங்களில் 23,444 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 பேர் ‘சென்டம்’ எடுத்துள்ளனர். தமிழ் 8 பேர், ஆங்கிலம் 346 பேர், கணிதம் 1,996 பேர், அறிவியல் 10,838 பேர், சமூக அறிவியல் 10,256 பேர் என 23,444 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in