Last Updated : 05 Feb, 2025 03:42 PM

 

Published : 05 Feb 2025 03:42 PM
Last Updated : 05 Feb 2025 03:42 PM

ஏப்.20-ல் பயோ டெக்னாலாஜி படிப்புக்கான கேட்-பி நுழைவுத்தேர்வு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 20-ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதள வழியாக மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650-ம் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மார்ச் 5, 6-ம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x