Published : 05 Feb 2025 01:17 AM
Last Updated : 05 Feb 2025 01:17 AM

தொலைதூரக் கல்வியில் சேர பிப்.15 வரை அவகாசம்

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடங்களில் சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை, முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. 2025-ம் ஆண்டு ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 15 வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in) விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in/) விண்ணப்பித்துக்கொள்ளலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.ignou.ac.in) பார்க்கலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x