நுண்கலைகளில் சிறந்த மாணவர்களுக்கு ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு: அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்

சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக விளக்கமளித்த சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி. உடன் டீன் (மாணவர்கள் நலன்) சத்தியநாராயணன்.
சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக விளக்கமளித்த சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி. உடன் டீன் (மாணவர்கள் நலன்) சத்தியநாராயணன்.
Updated on
1 min read

சென்னை: இசை, ஓவியம், உள்ளிட்ட நுண்​கலைகளில் சிறந்து விளங்​கும் மாணவர்​களுக்கு சென்னை ஐஐடி​யில் சிறப்பு ஒதுக்​கீடு வழங்​கும் புதிய முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்​படுத்​தப்பட இருக்​கிறது.

இதுதொடர்பாக செய்தி​யாளர்​களிடம் சென்னை ஐஐடி இயக்​குநர் வி.காமகோடி நேற்று கூறிய​தாவது: பொது​வாகவே, நுண்​கலைகளில் சிறந்த மாணவர்கள் புதுமை மற்றும் படைப்​பாற்​றலில் சிறந்து விளங்​கு​வர். பொறி​யியல் மற்றும் தொழில்​நுட்பத் துறை​யில் புதுமை சிந்தனை மிகவும் அவசி​யம். இதை கருத்​தில்​கொண்டு நுண்​கலை​யில் சிறந்து விளங்​கும் மாணவர்​களுக்கு சிறப்பு ஒதுக்​கீடு வழங்​கும் முறையை கொண்டுவர முடிவுசெய்​தோம். இதற்கு ஐஐடி செனட், இணை சேர்க்கை வாரி​யம், மத்திய கல்வி அமைச்​சகம், மத்திய கலாச்சார அமைச்​சகம் ஆகியவை ஒப்புதல் வழங்​கி​யுள்ளன.

இதைத்​தொடர்ந்து, சென்னை ஐஐடி​யில் உள்ள 14 துறை​களில் வழங்​கப்​படும் பிடெக் படிப்பு​களில் தலா 2 இடங்​களும், ஏரோஸ்​பேஸ் இன்ஜினீயரிங், பயோ இன்ஜினீயரிங், பிசிக்ஸ் ஆகிய துறை​களில் கூடு​தலாக தலா 2 இடங்​களும் என மொத்தம் 34 இடங்கள் நுண்கலை மற்றும் கலாச்சார சேர்க்கைக்காக புதிதாக உருவாக்​கப்​பட்​டுள்ளன. 2 இடங்கள் எனில் அதில் ஒரு இடம் பெண்​களுக்​கானது. மீதமுள்ள இடம் பொது​வானது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அதிகாரமளித்தல் அமைச்​சகம் வழங்​கும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்​கார் விருது, மத்திய கல்வி அமைச்​சகத்​தின் தேசிய பாலஸ்ரீ விருது, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளை​யாட்டு அமைச்​சகம் வழங்​கும் தேசிய இளைஞர் விருது, மத்திய அரசின் சங்கீத நாடக அகாட​மி​யின் உஸ்தாத் பிஸ்​மில்லா கான் யுவ புரஸ்​கார் விருது, அகில இந்திய வானொலி அல்லது தூர்​தர்​ஷனின் பி கிரேடு சான்​றிதழ் பெற்​றவர்கள் உட்பட 9 பிரிவு​களில் விருது, உதவித்​தொகை பெற்​றவர்கள் இந்த தனி இடஒதுக்​கீட்டுக்கு தகுதி பெறு​வர்.

அவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்​தேர்​வில் ஏதேனும் ஒரு பிரி​வின் கீழ் தரவரிசை​யில் இடம்​பெற்​றவர்​களாக இருக்க வேண்​டும். அவர்கள் பெற்ற விரு​தின் தகுதிக்கு ஏற்ப குறிப்​பிட்ட மதிப்​பெண்கள் தரப்​பட்டு அதன் அடிப்​படை​யில் பிடெக் படிப்​புக்கு தேர்வு செய்​யப்​படு​வர். மாணவர்கள் தங்களுக்கு விருப்​பமான பாடப்​பிரிவை தேர்வு செய்​து​கொள்​ளலாம். இந்த சிறப்பு ஒதுக்​கீடு அடுத்த கல்வி ஆண்டில் (2025-2026) நடைமுறைப்​படுத்​தப்​படும். இதற்கான மாணவர் சேர்க்கைக்கு தனியாக ஆன்லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும். ஆன்லைன் விண்​ணப்பப் பதிவு ஜூன் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும். இந்த சிறப்பு ஒதுக்​கீட்டுக்கான இடங்​கள் எ​திர்கால சூழலைக் கருத்​தில்​கொண்டு அதிகரிக்​கப்​படும். இவ்​வாறு ​கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஐஐடி டீன் (​மாணவர்​கள் நலன்) சத்​தியநாராயணன்​ உடனிருந்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in