Published : 14 Sep 2023 04:04 AM
Last Updated : 14 Sep 2023 04:04 AM

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சி பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதன் பயிற்சி காலம் 12 மாதங்கள். பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். கட்டண விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். www.tncuicm.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

செப். 13 முதல் செப். 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு வந்த வாசி சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x