கல்வி அகிம்சை அடிப்படையில் இருக்க வேண்டும் - ஜெர்மனி காந்தி தகவல் மையத் தலைவர் ஆலோசனை

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் இன்று நடந்த சிறப்பு சொற்பொழிவில் பேசிய ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப்  என்பவருடன் மாணவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் இன்று நடந்த சிறப்பு சொற்பொழிவில் பேசிய ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப்  என்பவருடன் மாணவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
Updated on
1 min read

மதுரை: கல்வி என்பது அகிம்சை அடிப்படையில் இருக்க வேண்டும், அப்போதுதான் உலக அமைதி சாத்தியமாகும் என ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத்தின் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் ‘கல்வி தத்துவம்- உலகியல் பார்வை’ எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு இதற்கு நடைபெற்றது. இதற்கு காந்தி அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் ஆர்.தேவதாஸ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக, ஜெர்மனி நாட்டின் காந்தி தகவல் மையத்தின் தலைவர் கிறிஸ்டியன் பார்டல்ப் பங்கேற்று பேசுகையில், "கல்வி என்பது அகிம்சை அடிப்படையில் இருக்க வேண்டும். அப்போதுதான் உலக அமைதி சாத்தியமாகும். மேலும் மகாத்மா காந்தி வலியுறுத்திய கல்விக் கொள்கை இன்றைய மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இது தனிமனித அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதிக்கு சாத்தியமாக இருக்கும்" என்றார்.

முடிவில், பேராசிரியை வளர்மதி நன்றி கூறினார். இதில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in