ஐஐசிஏ, என்ஏஎல்எஸ்ஏஆர் நிறுவனங்களில் திவால் சட்டங்கள் குறித்த படிப்பு அறிமுகம்

ஐஐசிஏ, என்ஏஎல்எஸ்ஏஆர் நிறுவனங்களில் திவால் சட்டங்கள் குறித்த படிப்பு அறிமுகம்
Updated on
1 min read

ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் புதுடெல்லியில் திவால் மற்றும் திவால் சட்டங்களில் எல்.எல்.எம் என்ற புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தை இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் கோவில், ஐஐசிஏவின் இயக்குநர் மற்றும் சிஇஓ பிரவீன் குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இதன்பின் உரையாற்றிய மனோஜ் கோவில், திவால் மற்றும் திவால் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்புகளை வழங்குவதில் ஐஐசிஏ முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருவதை பாராட்டியதுடன், திவால் சட்டத்தில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே இந்தப் படிப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

ஐஐசிஏவின் இயக்குநர் ஜெனரல் மற்றும் சிஇஓ பிரவீன் குமார், ஐதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் கே.வித்யுல்லதா ரெட்டி மற்றும் ஐஐசிஏவின் கார்ப்பரேட் சட்டப் பள்ளியின் தலைவர் டாக்டர் பைலா நாராயண ராவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இரண்டு வருட முழு நேர படிப்பாக வழங்கப்படும் இந்த எல்.எல்.எம். பட்டப்படிப்பு, நான்கு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2023 ஜூன் 8-ம் தேதி தொடங்கி 2023 ஜூலை 31 அன்று முடிவடையும். மாணவர்கள் www.nalsar.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in