Published : 18 Sep 2017 05:06 PM
Last Updated : 18 Sep 2017 05:06 PM

விவாதக் களம்: தகுதி நீக்க விவகாரம்- உங்கள் கருத்து என்ன?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்ட 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற தீர்ப்புகளை பலரும் காரணம் காட்டி பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனேகம் பேர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் முடிவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சிலர் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிலர் உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில் தற்போது சட்டப்பேரவை தலைவர் தனபால் எடுத்த முடிவை உத்தரகாண்ட் மாநில தீர்ப்பின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

* 2011 கர்நாடக எடியூரப்பா வழக்கின் அடிப்படையில் இதை பார்க்கவேண்டுமா?

அல்லது

* உத்தரகாண்ட் தீர்ப்புத்தான் சமீபத்தில் வந்த தீர்ப்பு அதனடிப்படையில் இதை அணுக வேண்டுமா?

இது குறித்த உங்கள் கருத்து என்ன? பார்வை என்ன? பகிருங்கள்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x