நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை: கடலூர் அருகே பயங்கரம்

பதற்றம் காரணமாக போலீஸார் குவிப்பு
கொலையான சசிகுமார்

கொலையான சசிகுமார்

Updated on
1 min read

கடலூர்: கடலூர் அருகே ரங்கா ரெட்​டிப்​பாளை​யத்​தில் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யும் அரி​வாளால் வெட்​டி​யும் இளைஞர் ஒரு​வர் கொல்​லப்​பட்​டார். இச்​சம்​பவத்​தால் அப்​பகு​தி​யில் பதற்​றம் நில​வுவ​தால் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

கடலூர் பெரிய காட்​டுப்பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் சசிகு​மார் (31). இவரையும் இவரது நண்பர் ராஜாவையும் ரங்கா ரெட்​டிப்​பாளை​யத்​தில் 6 பேர் கொண்ட கும்​பல் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யது. தப்பி ஓடிய இருவரையும் விரட்டிய கும்பல் சசிகு​மாரை வெட்டிக் கொன்றது.

தகவலறிந்த ரெட்​டிச் சாவடி போலீ​ஸார் உடலை பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பினர். தப்​பியோடிய ராஜா போலீ​ஸாரிடம் சரணடைந்தார்.

கடலூர் மற்​றும் புதுச்​சேரி போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். ரியல் எஸ்​டேட், கட்​டப்​பஞ்​சா​யத்து போன்ற தொழிலில் ஈடு​பட்டு வந்​ததநிலையில் முன்விரோதம் காரண​மாக கொலை நடந்​திருக்​கலாம் என்ற கோணத்​தில் போலீ​ஸார் விசா​ரிக்கின்றனர்.

<div class="paragraphs"><p>கொலையான சசிகுமார்</p></div>
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.அமீன் நலமுடன் உள்ளார் - சகோதரி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in