சென்னை | மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது

சென்னை | மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது
Updated on
1 min read

சென்னை: பெருங்​குடி - வேளச்​சேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே மின்​சார ரயில்​களில் பெண் பயணி​களிடம் தங்க செயின்​களை பறித்த இளைஞரை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

திரு​வான்​மியூர் ரயில்வே காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பெருங்​குடி - வேளச்​சேரி ரயில் நிலை​யங்​களுக்கு இடையே, மின்​சார ரயில்​களில் பெண் பயணி​களிடம் செயின் பறிப்பு சம்​பவம் அடிக்​கடி நடை​பெற்​றது.

இது தொடர்​பாக, 6 வழக்​கு​களை பதிவு செய்​து, குற்​ற​வாளியை ரயில்வே போலீ​ஸார் தேடி வந்​தனர். மேலும், ரயில்வே காவல் துணை கண்​காணிப்​பாளர் கவினா தலை​மை​யில் காவல் ஆய்​வாளர் சி.சுரேஷ், உதவி ஆய்​வாளர்​கள் குமு​தா, ஹரி​தாஸ் மற்​றும் போலீ​ஸார் அடங்​கிய தனிப்​படை அமைக்​கப்​பட்​டது.

இந்த தனிப்​படை போலீ​ஸார் தீவிர புல​னாய்வு மேற்​கொண்​டு, 6 குற்ற வழக்​கு​களில் தொடர்​புடைய தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறை சேர்ந்த விஜய​ராகவன் (26) என்​பவரை பெருங்​குடி​யில் கைது செய்​தனர்.

போலீஸாருக்கு பாராட்டு

அவரிடம் இருந்து மொத்​தம் 16 பவுன் தங்க நகைகள் கைப்​பற்​றப்​பட்​டன.

தொடர்ந்​து, அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர். துரித​மாக செயல்​பட்டு குற்​ற​வாளியை கைது செய்த தனிப்​படை போலீ​ஸாரை ரயில்வே காவல்​துறை இயக்​குநர் வன்​னியபெரு​மாள், ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் ராஜன் ஆகியோர் பாராட்​டினர்.

சென்னை | மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் தங்க செயின் பறித்த இளைஞர் கைது
தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in