திருநெல்வேலி பணகுடியில் மாணவர் கொலை வழக்கில் இளைஞர் கைது

திருநெல்வேலி பணகுடியில் மாணவர் கொலை வழக்கில் இளைஞர் கைது
Updated on
1 min read

திருநெல்வேலி: பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். திருநெல்​வேலி மாவட்​டம் பணகுடியைச் சேர்ந்த மாரியப்​பன் மகன் லட்​சுமணன் (15). இவர் அப்​பகு​தி​யில் உள்ள அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இவரது வீட்​டின் எதிர் வீட்​டில் வசிப்​பவர் ரத்​தின வடிவேல். இவரது மகன் சபரி​ராஜன் (23). மாரியப்​பன் மற்​றும் ரத்​தினவடிவேல் குடும்​பத்​தினர் உறவினர்​கள்​போல் பழகி வந்​தனர். இதனால் லட்​சுமணன் அடிக்​கடி சபரி​ராஜன் சென்று விளை​யாடு​வது வழக்​கம்.

கடந்த 5-ம் தேதி பள்ளி முடிந்து வீட்​டுக்​குச் சென்று கொண்​டிருந்த லட்​சுமணனை, சபரி​ராஜன் அழைத்​துள்​ளார். இதையடுத்​து, லட்​சுமணன் அவரது வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார்.

இரு​வரும் வீட்​டின் வரவேற்பு அறை​யில் அமர்ந்து பேசிக்​கொண்டே டிவி பார்த்​துக்​கொண்​டிருந்​தனர். அப்​போது அவர்​களுக்​குள் வாய்த்​தக​ராறு ஏற்​பட்​டுள்​ளது. அப்​போது மது போதை​யில் இருந்த சபரி​ராஜன் திடீரென்று ஆத்​திரமடைந்​து, அரி​வாளால் லட்​சுமணனை வெட்​டி​யுள்​ளார்.

இதில் பலத்த காயமடைந்த லட்​சுமணன் உயிருக்​குப் போராடி​னார். பணகுடி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், பின்​னர் மேல்​சிகிச்​சைக்​காக நாகர்​கோ​வில் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு தீவிர சிகிச்​சைப் பிரி​வில் லட்​சுமணனுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த நிலை​யில், நேற்று சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக பணகுடி போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​து, சபரி​ராஜனை கைது செய்​தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

திருநெல்வேலி பணகுடியில் மாணவர் கொலை வழக்கில் இளைஞர் கைது
காப்புரிமை வழக்கு: இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சியம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in