சேலத்தில் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை தண்ணீர் தொட்டியில் வீசிய மர்ம நபர்கள் - பின்னணி என்ன?

தண்​ணீர் தொட்​டி​யில் இருந்து பெண்​ணின் உடல் பாகங்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார். படம்: எஸ்.குரு பிர​சாத்

தண்​ணீர் தொட்​டி​யில் இருந்து பெண்​ணின் உடல் பாகங்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார். படம்: எஸ்.குரு பிர​சாத்

Updated on
1 min read

சேலம்: சேலத்​தில் பெண்ணை 7 துண்​டு​களாக வெட்​டிக் கொலை செய்த மர்ம நபர்​கள் உடல் பாகங்​களை மூட்​டைகளில் கட்டி மொட்டை மாடி தண்​ணீர் தொட்​டி​யில் வீசிச் சென்ற சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சேலம் அரிசி​பாளை​யத்தைச் சேர்ந்​தவர் ரமேஷ். இவர் குடும்​பத்​துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று வீடு திரும்​பினார். குடிநீர் குழாயை திறந்​த​போது தண்​ணீர் துர்​நாற்​றம் வீசியது. அதிர்ச்​சி​யடைந்த அவர் மொட்டை மாடி சென்று தண்​ணீர் தொட்​டியை திறந்து பார்த்​தார். அங்கு கிடந்த பிளாஸ்​டிக் மூட்​டை கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்​த​போது அதில் துண்டு துண்​டாக வெட்​டப்​பட்ட பெண்​ணின் கை, கால்​கள் இருந்​தன. மற்​றொரு தொட்​டி​யிலும் ஒரு மூட்டை கிடந்​தது.

உடனே இதுகுறித்து பள்​ளப்​பட்டி போலீஸாருக்கு தகவல் தெரி​வித்​தார். போலீ​ஸார் மூட்​டைகளை மீட்​டனர். ஒரு மூட்​டை​யில் கை, கால்​களும், மற்​றொன்றில் தலை மற்​றும் மார்புபகு​தி​யும் துண்டு துண்​டாக வெட்​டப்​பட்ட நிலை​யில் பெண்​ணின் உடல் பாகங்​கள் இருந்​தன. மேலும், அருகே வசித்து வரும் சீனி​வாசன் என்​பவரது வீட்டு மொட்டை மாடி​யில் உள்ள தண்​ணீர் தொட்​டி​யின் கீழ் இருந்த மூட்​டை​யில் பெண்​ணின் இடுப்பு உள்​ளிட்ட பாகங்​கள் இருந்​தன. மொத்​தம் 7 துண்​டாக பெண்​ணின் உடல் பாகங்​கள் வெட்டி கொலை செய்​யப்​பட்​டிருந்​தன.

மோப்ப நாய் ஜூலி மற்​றும் தடய அறி​வியல் நிபுணர்​கள் வரவழைக்​கப்​பட்டு தடயங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. கொலை செய்​யப்​பட்ட பெண்​ணின் கையில் “கணப​தி” என்ற பெயருடன் விநாயகர் பச்சை குத்​தப்​பட்​டுள்​ளது.

அந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்​தவர், அவரை கொலை செய்த மர்ம நபர்​கள் யார் என்​பது குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு​களை கொண்டு விசா​ரித்து வரு​கின்​றனர். இதனிடையே, இதுகுறித்து அருகே வசிக்​கும் கல்​லூரி மாணவரை பிடித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதனிடையே, சேலம் மேட்​டுப்​பட்டி தாதனூரைச் சேர்ந்த ஜீவானந்​தம் என்​பவர் தனது மனைவி தங்​கமணியை (50) காண​வில்லை என வீராணம் போலீ​ஸில் புகார் செய்​துள்​ளார். கொலை​யான பெண் இவராக இருக்​குமோ என்ற கோணத்​தி​லும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>தண்​ணீர் தொட்​டி​யில் இருந்து பெண்​ணின் உடல் பாகங்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார். படம்: எஸ்.குரு பிர​சாத்</p></div>
ஆவின் வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in