குட்கா கடத்தியவர்களை கைது செய்ய முயன்ற​ பெண் காவல் அதிகாரியை கார் ஏற்றி கொல்ல முயற்சி

ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது
கைது செய்யப்பட்ட கணேச பெருமாள், சிவபிரசாந்த்.

கைது செய்யப்பட்ட கணேச பெருமாள், சிவபிரசாந்த்.

Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் சேத்​துப்​பட்டு வழி​யாக சித்​தூரில் இருந்து விழுப்​புரத்​துக்கு காரில் குட்கா புகை​யிலைப் பொருட்​கள் கடத்​திச் செல்​லப்​படு​வ​தாக சேத்​துப்​பட்டு போலீ​ஸாருக்​குத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து சேத்​துப்​பட்டு காவல் நிலைய இன்​ஸ்​பெக்​டர் குண​பாலன், சப்​-இன்​ஸ்​பெக்​டர் லதா மற்​றும் போலீஸார், சேத்​துப்​பட்​டில் உள்ள நான்​கு​ முனை சந்​திப்பில் நேற்று வாகனசோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இதற்​கிடையே, பேருந்து நிறுத்​தம் அருகே வேக​மாக வந்தகாரை போலீ​ஸார் தடுத்து நிறுத்தமுயன்​ற​போது, அவர்​களை இடித்து தள்​ளி​விட்​டு, கார் வேக​மாகச் சென்​றது. உடனே இதுகுறித்து எஸ்.ஐ. லதாவுக்கு போலீ​ஸார் தகவல் தெரி​வித்​தனர். ஏற்​கெனவே, நான்​கு​முனை சந்​திப்​பில் தயா​ராக இருந்த எஸ்.ஐ.லதா, அதிவேக​மாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்​ற​போது, கார் அவர் மீது மோது​வது​போல் அதிவேக​மாக வந்​துள்​ளது. இதனால், அதிர்ச்​சி​யடைந்த லதா, சற்று வில​கியதால் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார். அந்​தக் கார் வந்​த​வாசி சாலை​யில் திரும்​பிச் சென்​றது.

இதையடுத்து அங்​கிருந்த பொது​மக்​கள் காரை துரத்​திச்​சென்று பழம்​பேட்டை அரசு மேல்​நிலைப்​பள்ளி வேகத்தடை அருகே காரை மடக்​கி, அதில் இருந்த 2 பேரைப் பிடித்​தனர். காரைப் பின்​தொடர்ந்து வந்த இன்​ஸ்​பெக்​டர் குண​பாலன், எஸ்.ஐ. லதா ஆகியோரிடம் இரு​வரை​யும் ஒப்​படைத்​தனர்.

அதையடுத்து, குட்கா பொருள்​களைக் கடத்தி வந்த ஆந்​திர மாநிலம் சித்​தூரைச் சேர்ந்த கணேசபெரு​மாள் (46), சிவபிர​சாந்த் (30) ஆகியோரைக் கைது செய்து, காரில் இருந்த ரூ.2.50 லட்​சம் மதிப்பிலான 285 கிலோ குட்கா பொருட் களைப் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட கணேச பெருமாள், சிவபிரசாந்த்.</p></div>
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in