

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள ஆனந்தூரில் டிச. 27-ம் தேதி ஊத்தங்கரை வட்டாட்சியர் ராஜலட்சுமி, துணை வட்டாட்சியர்கள் சகாதேவன், ஜெயபால் மற்றும் அலுவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரியில் மண் கடத்திய சிலரை தடுக்க முயன்றபோது, பொக்லைன் வாகனத்தை ஏற்றி அதிகாரிகளைக் கொல்ல முயன்றனர். இது தொடர்பாக செங்கம்பட்டி சுரேஷ் (47), ஊத்தங்கரை செங்கழுநீர்பட்டி தங்கபாலு (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவிட்டார்.