டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: அண்ணா சாலை​ மின்​சார வாரி​ய தலைமை அலு​வல​கத்​தில் டெண்டர், கொள்​முதல் உட்பட முக்​கிய ஆவணங்​கள் அடங்​கிய 34 ஹார்டு டிஸ்க் காணா​மல் போனதை அதி​காரி​கள் கண்​டறிந்​தனர்.

இதுகுறித்து சிந்​தா​திரிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தனர். போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். முதல்​கட்​ட​மாக அலு​வல​கத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​கள் காவல் துறை விசா​ரணைக்​குள் கொண்​டு​வரப்​பட்​டனர்.

இதில், ஹார்டு டிஸ்க்​கு​களை திருடியது, அங்கு ஒப்​பந்த முறை​யில் பணி​யாற்​றிய ஊழிய​ரான ராயப்​பேட்​டையைச் சேர்ந்த கோபி​நாத் (41) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்​தினர். அவரது வாக்​கு மூலத்​தின் அடிப்​படை​யில் மேலும் ஒரு​வரை கைது செய்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அனைத்தும் மீட்பு

மின்​வாரி​யத்​தின் முக்​கிய தகவல்​கள் அடங்​கி​யுள்ள ஹார்டு டிஸ்க் என்​ப​தால், அவற்றை திருட லட்​சக்​கணக்​கில் பணம் கைமாறி இருக்​கலாம் என்று கருதப்​படு​கிறது.

இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​களைக் கண்​டறிந்து அவர்​களை கைது செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும், திருடு​போன அனைத்து ஹார்டு டிஸ்க்​கு​களும் மீட்​கப்​பட்​ட​தாக​வும் போலீ​ஸார் தெரிவித்தனர்.

இதில் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள், துறைரீ​தி​யான பாது​காப்பு அம்​சங்​கள் குறித்து மின்​வாரிய அலு​வல​கத்​தில் துறை அலு​வலர்​களு​டன் மின்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தின் வெவ்​வேறு பிரிவு​கள், தளங்​களில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன.

கைதானவர்​கள் அவற்றை பெங்​களூரு​வுக்கு கொண்டு சென்​ற​தால், அங்கு சென்​றும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சில ஊழியர்​களுக்கு இதில் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. சிசிடிவி ஆதா​ரங்​களை வைத்து விசா​ரணை நடப்​ப​தால் யாரும் தப்ப முடி​யாது.

கடந்த 5 ஆண்​டு​களில் நடை​பெற்ற டெண்​டர்​கள், நிலக்​கரி கொள்​முதல், சோலார் திட்​டங்​களுக்​கான அனு​மதி ஆவணங்​கள் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. திருடப்​பட்ட தரவு​களின் கூடு​தல் நகல்​கள் இருப்​ப​தால் அவற்றை மீட்​ப​தற்​கான வேலைகள் நடந்து வரு​கின்​றன.

முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி காலத்​தில் டிரான்​ஸ் ஃ​பார்​மர் கொள்​முதலில் நடந்த முறை​கேடு தொடர்​பான வழக்​கு​கள் ஏற்​கெ​னவே சிபிஐ வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. மின்​வாரி​யத்​தில் இனி தவறு நடக்​காத​வாறு டெண்​டர் பாலிசி கடந்த வாரம் மாற்​றப்​பட்​டுள்​ளது.

இனிமேல் சந்தை விலை, உற்​பத்​தி​யாளர் விலை மதிப்​பீடு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் வெளிப்​படை​யாக டெண்​டர் விலை நிர்​ண​யிக்​கப்​படும். முந்​தைய ஆட்​சி​யில் வாங்​கப்​பட்ட தரம் குறைந்த நிலக்​கரி​யால் அனல்​மின் நிலை​யங்​களில் முழு உற்​பத்தி செய்ய முடிய​வில்​லை.

கடந்த 2 நாட்​களாக காற்​றாலை மின் உற்​பத்தி குறைந்​ததே தற்​போதைய நெருக்​கடிக்கு காரணம். அதை சரிசெய்ய நீண்ட கால ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. ஒரு சில வாரங்​களில் அனைத்​தும் முழு​மை​யாக சீரமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்பு: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பெண் செயலராக சாந்தி பொறுப்பேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in