புகார் அளிக்க சென்ற நட்சத்திர ஓட்டல் சர்வரிடம் ரூ.15 ஆயிரம் பறித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்

புகார் அளிக்க சென்ற நட்சத்திர ஓட்டல் சர்வரிடம் ரூ.15 ஆயிரம் பறித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்
Updated on
1 min read

சென்னை: புதுச்​சேரியை சேர்ந்த சரவணன் (24), சென்னை பட்​டினப்​பாக்​கத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் சர்​வ​ராக பணி செய்து வரு​கிறார். கடந்த 25-ம் தேதி இரவு அண்ணா நகருக்கு பைக்​கில் சென்​றார்.

நுங்​கம்​பாக்​கம் லேக் ஏரியா அருகே அவரை வழிமறித்த திருநங்​கைகள் ரூ.5 ஆயிரத்தை ‘ஜிபே’ மூலம் பறித்​துக் ​கொண்டு தப்​பினர். சரவணன் அந்த வழி​யாக ரோந்து பணியி​லிருந்த நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸாரிடம் இது தொடர்​பாக முறை​யிட்​டார்.

ஆனால் அவர்​களோ உன் மீது​தான் சந்​தேகம் உள்​ளது எனக்​கூறி, அவர்​களும் பணம் கேட்டு மிரட்​டினர். அவர் பணம் இல்லை எனக் கூறிய​தால், அவரை அரு​கில் உள்ள ஏடிஎம் மையத்​துக்கு அழைத்​துச் சென்று ரூ.15,000 எடுக்க வைத்து பறித்​தனர்.

இதையடுத்து சரவணன் நேற்று முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி துணை ஆணை​யர் ஜெயச்​சந்​திரனிடம் புகார் தெரி​வித்​தார். இதை அறிந்த காவல் ஆணை​யர் அருண் உடனடி விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

அதன்​படி போலீஸ் அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில், ஓட்டல் சர்​வரிடம் போலீஸார் பணம் பறித்து பங்​கிட்​டுக் கொண்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, வழிப்​பறி​யில் ஈடு​பட்ட நுங்​கம்​பாக்​கம் காவல் நிலைய சட்​டம் - ஒழுங்கு பிரிவைச் சேர்ந்த போலீஸார் காஜா மொய்​தீன், ரத்​தினம்,விக்​னேஷ் ஆகிய 3 பேரை இடைநீக்​கம் செய்து காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார். அவர்​களை கைது செய்​வதற்​கான நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகிறது.

புகார் அளிக்க சென்ற நட்சத்திர ஓட்டல் சர்வரிடம் ரூ.15 ஆயிரம் பறித்த 3 போலீஸார் சஸ்பெண்ட்
“இந்திய கலாச்சாரத்துக்கு அடித்தளமே தமிழகம்தான்” - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in