

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பெண்ணை கொலை செய்த காவலர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (39). அப்பகுதியில் கணினி மையம் நடத்தி வந்தார். இவரது சகோதரி சுப்புலட்சுமி. கணவரை இழந்தவர். இவருக்கும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் முத்துக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதில் சுப்புலட்சுமியின் 20 பவுன் நகைகளை முத்துக்குமார் அடமானம் வைத்துள்ளார். அதை திருப்பி கொடுக்குமாறுபிரியா முத்துக்குமாரை வற்புறுத்தி வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு, பிரியாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால், பிரியாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார். புதுக்கோட்டை போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கெனவே தனது மாமனார் மற்றும் உறவினரை கொலை செய்ய முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.